Posts

Showing posts from July, 2020

The big ocean

Image
               நம் பூமி மூன்று பங்கு நீர் பரப்பையும் ஒரு பங்கு நில பரப்பையும் கொண்டுள்ளது. நிலப்பரப்பு பெருங்கடலால் சூழப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் பிரமாண்ட உலகம் உள்ளது. அங்கு பல்வேறு விதமான உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறைகள், பாசிகள், மீன் இனங்கள், கடற்பசுக்கள், ஆமைகள், சீல், எண்காலி, நண்டு, பீரங்கி வகை மீன்கள், கடற்குதிரை, கடல் கீரி, கடல் சிங்கம், மின் விலாங்கு மீன், கோளா போன்ற விஷ மீன்கள், ஜெல்லி மீன்கள், ஆக்டோபஸ் மற்றும் நட்சத்திர மீன்கள் போன்றவை கடலில் வாழ்கின்றன. கடலுக்கு அடியில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் சூரிய ஒளி மிகவும் குறைவு. பவளப்பாறைகள்(Coral reefs) -  இவை பவளம் எனும் உயிரினத்தால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்டினால் உருவாகின்றன. இவை பச்சை, கருஞ்சிவப்பு, பழுப்பு, மஞ்சள் போன்ற வண்ணங்களில் உள்ளது. இவை கடல்களின் மலைக் காடுகள் எனப்படும். இவை கடல்வாழ் உயிரினங்களின் வாழிடமாக உள்ளது. இவை பசிபிக் பெருங்கடல் மற்றும் வெப்பமான கடல் பகுதிகளில் காணப்படும். மீன்கள்(Fish) -  இவை நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு இனம் ஆகும். இவை தலை, உடல், வால் என மூன்று பகுதிக

The animal kingdom

Image
               பூமியில் காணப்படும் உயிரினங்களில் விலங்குகளும் ஒன்று. விலங்குகள் அனிமாலியா(Animalia) வகுப்பைச் சேர்ந்தது. விலங்கினங்களை மீடாசொவா(Metazoa) என்றும்‌ அழைப்பர்.இவை யூகேர்யோடிக் பல செல் உயிரி ஆகும்.இவை தன்னிச்சையாக நகரும் இயல்பை பெற்றுள்ளது.எனவே, இவை தாவரங்கள், பூஞ்சைகளில் இருந்தும் வேறுபடுகிறது. எனவே, விலங்கினங்களை தனியாக வகைப்படுத்தினர். இவற்றின் உடலமைப்பு தசைகள், திசுக்கள் மற்றும் எலும்புகளால் ஆனது. இவை பால்முறை இனப்பெருக்கம் செய்கின்றன. மற்றும்  விந்தணுக்கள் மூலம் கருமுட்டைகள் உருவாகி புதிய உயிர்கள் பிறக்கின்றன. சில விலங்குகள் பாலில்லா இனப்பெருக்கம்(Parthenogenesis) செய்யும். விலங்குகளை இருவகையாக பிரிக்கின்றன. அவை,                      1. முதுகு நாண் உடையவை                     2. முதுகு நாண் அற்றவை முதுகு நாண் உடையவை - மீன்கள், இருவாழ்வன ( தவளை, முதலை), ஊர்வன ( பாம்பு), பறவைகள், பாலூட்டிகள் முதுகு நாண் அற்றவை - கடற்பஞ்சு, ஜெல்லி மீன், புழுக்கள், கரப்பான் பூச்சி, தேள், பூரான், ஆக்டோபஸ், நத்தை, நட்சத்திர மீன்கள் மற்றும் ஒரு செல் உயிரி போன்றவை ஆகும்.

Plants and Tamil literary flowers

Image
                                தாவரங்கள் நம் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தாவரங்களிடமிருந்து தான் நாம் உணவை பெறுகிறோம். தாவரங்கள் ஆலை(Plantae) வகுப்பைச் சேர்ந்தது. இவை ஒளிச்சேர்க்கை (Photosynthesis)  மூலம் உணவை தயாரிக்கிறது. தாவரங்கள் நிலைப்புத்தன்மை வாய்ந்தவை மற்றொரு இடத்திற்கு நகர இயலாது. எனவே, இதனை 'நிலைத்திணை' என்பர்.                    இதுவரை 2,87,655 தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் பூக்கும் தாவரங்கள் மற்றும் பிரையோஃபைட்டுகள் ( பூக்காத தாவரங்கள்) என இருவகைப்படும். பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை 2,58,650 மற்றும் பிரையோஃபைட்டுகளின் எண்ணிக்கை 18,000 ஆகும்.                                       பூக்கள்                              தாவரங்களில் பாசிகள் (algae), புற்கள், செடி, கொடிகள், மரங்கள் மற்றும் பன்னம்( Ferns or  Pteridophytes)      ஆகியவை அடங்கும்.                                       பாசிகள்                                        மரங்கள்                 பன்னம் அல்லது வித்திலியம், இவை மிகு பழங்காலத்தில் தோன்றியவை. இவை நுண்வித்துக்கள