Posts

Showing posts from May, 2020

‍The Rainforest

Image
                       மழைக்காடுகள் பசுமை வாய்ந்தவை ஆகும். இங்கு அதிக அளவிலான மழைப்பொழிவு காணப்படும். இவை பழமையான வாழ்க்கை சுற்றுச்சூழல் அமைப்புகளை கொண்டுள்ளது. மழைக்காடுகளில் வருடத்திற்கு 200 செ.மீ. மழை பதிவாகிறது. இவ்வகை காடுகள் விதானம் என்று சொல்லக்கூடிய மேற்பரப்பை கொண்டுள்ளது. இந்த மேற்பரப்பு அடர்ந்த கிளைகளால் சூழப்பட்டுள்ளது.            மழைக்காடுகளில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. உயிரினப்பல்வகைமை ( Biodiversity) தாவரங்கள் மற்றும் விலங்குகளோடு மட்டுமின்றி மண் வளம் , நீரின் தன்மை மற்றும் காற்றின் தூய்மை போன்றவற்றையும் சேரும். மழைக்காடுகளின் வானிலை மாறிக்கொண்டே இருக்கும். இவை உயிரினப்பல்வகைமையை பாதிக்கும்.               மழைக்காடுகளிலே மிகப்பெரிய காடு அமேசான் காடு ஆகும். அமேசான் ஆறு  தென் அமெரிக்கா , வட ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் தெற்குப் பகுதிகளிலும் காணப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆறுகளின் தலைமையிடமாக உள்ளது. மழைக்காடுகளிலே மிகச்சிறிய காடுகள் மத்திய அமெரிக்கா , மடகாஸ்கர் , ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.     

Birds

Image
இயற்கையின் அழகில் பறவைகளும் ஒன்று. சுதந்திரத்திற்கு பேர் போனது பறவை இனம் ஆகும். "இறக்கைகள் கொண்ட இருகாலி"யைப் பறவைகள் என்பர்.பறவைகளை புள் என்றும் கூறுவர். பறவைகள் முதுகுநாணி உடையவை. இவை விலங்கின வகைகளின் கீழ் வரும். விலங்குகளில் சிறகுகள் உடைய பிராணிகளை பறவைகள் என்பர். பறவையினங்களின் மொத்த எண்ணிக்கை  சுமார் 9000-க்கும் மேற்பட்டவை ஆகும். பறவையின் வாழ்வியல் முறைகளை அதன் காலில் வளையம் அணிந்து கண்டறிவர். பண்டையக் காலங்களில் புறா, பருந்து போன்றவை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு தூது அனுப்புவதற்காக பயன்படுத்தினர். கோழி, சேவல், வாத்து, காடை, கௌதாரி போன்ற பறவைகளை உணவாக மனிதர்கள் உட்கொள்கின்றனர்.    பலவிதமான பறவைகள் உள்ளன.பறவைகள் மரங்களின் விதைகளை பரப்பும் அற்புத செயலை செய்கிறது.பறவையின் எச்சங்களின் மூலம்  விதைகள் பரவுகிறது. பறவையினங்கள் பெரும்பாலும் பறக்க கூடியவை ஆகும். ஆனால், பென்குவின் , கிவி போன்ற பறவைகளால் பறக்க இயலாது. 1.தெற்கு காசோவரி ( southern cassowary) - மூன்றாவது உயரமான மற்றும் இரண்டாவது கனமான பறவை. நெருப்புக்கோழி , ஈமுக்கள் போன்ற பறவை ஆகும். 2.   விலங்கு எலு

தமிழ் மொழி

                 தமிழ் மொழி போல் இனிமையான மொழி வேறு எதுவுமில்லை. தமிழ் மொழி, திராவிட மொழி குடும்பத்தை சார்ந்தது.இது ஒரு செம்மொழியும் ஆகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இலக்கிய மரபுகளை கொண்டது. தமிழ் மொழி மிகவும் தொன்மை வாய்ந்த மொழி என்பதற்கு எடுத்துக்காட்டாக தொல்காப்பியம் விளங்குகிறது.இது தமிழ் மொழியின் இலக்கண நூல் ஆகும்.                                                          தமிழறிஞர்கள் தமிழ் மொழி தோன்றிய வரலாற்றை 5 காலங்களாக வகைப்படுத்தி உள்ளனர்.   அவையாவன, ‌‌‌‌                               1.  சங்க காலம்                         2.   சங்கம் மருவிய காலம்              ‌‌‌‌‌‌        3.   பக்தி இலக்கிய காலம்                       4.    மையக் காலம்                       ‌   5.   தற்காலம்       இவற்றில் பக்தி இலக்கிய காலம் மற்றும் மையக் காலக்கட்டத்தில் தமிழுடன் வடமொழி சொற்கள் கலந்து பேசப்பட்டது. தமிழ் மொழியில் இருந்து வட மொழியை நீக்கி தூய தமிழினை கொண்டு ‌‌‌வர தொடங்கிய இயக்கமே தனித்தமிழ் இயக்கம் ஆகும்.                             வேறு எந்த மொழி

மொழி

                                                                        மொழி, நம் எண்ணங்களின் வெளிப்பாடு ஆகும்.ஆரம்ப  காலங்களில் மனிதர்கள் தங்களுடைய எண்ணங்களை முகபாவனைகளினாலும், கை அசைவுகளினாலும் வெளிப்படுத்தினர்.பின்பு தங்களுடைய எண்ணங்களை ஒலி வடிவில் பேச தொடங்கினர்.அந்த ஒலி வடிவிலான உரையாடல் அவர்களுக்கு தங்கள் எண்ணங்களை கருத்துக்களை எளிதாக மற்றவர்களுக்கு தெரிவிக்க உபயோகமாக இருந்தது.                                  உலகில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை சுமார் 6000-க்கும் மேற்பட்டவை ஆகும். ஆனால், அவற்றில் 700 மொழிகள் மட்டுமே பேசவும் எழுதவும் முடியும். அவற்றில் 100 மொழிகள் மட்டுமே உபயோகத்தில் உள்ளது.இந்த மொழிகளுக்கு எல்லாம் மூல மொழியாக 6 மொழிகள் கண்டறியப்பட்டது. அவை,                                                                                                                                                       1.எபிரேய மொழி                                           2.கிரேக்க மொழி                                           3. இலத்தீன் மொழி