மொழி
மொழி, நம் எண்ணங்களின் வெளிப்பாடு ஆகும்.ஆரம்ப காலங்களில் மனிதர்கள் தங்களுடைய எண்ணங்களை முகபாவனைகளினாலும், கை அசைவுகளினாலும் வெளிப்படுத்தினர்.பின்பு தங்களுடைய எண்ணங்களை ஒலி வடிவில் பேச தொடங்கினர்.அந்த ஒலி வடிவிலான உரையாடல் அவர்களுக்கு தங்கள் எண்ணங்களை கருத்துக்களை எளிதாக மற்றவர்களுக்கு தெரிவிக்க உபயோகமாக இருந்தது.
உலகில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை சுமார் 6000-க்கும் மேற்பட்டவை ஆகும். ஆனால், அவற்றில் 700 மொழிகள் மட்டுமே பேசவும் எழுதவும் முடியும். அவற்றில் 100 மொழிகள் மட்டுமே உபயோகத்தில் உள்ளது.இந்த மொழிகளுக்கு எல்லாம் மூல மொழியாக 6 மொழிகள் கண்டறியப்பட்டது. அவை, 1.எபிரேய மொழி
2.கிரேக்க மொழி
3. இலத்தீன் மொழி
4.சமஸ்கிருத மொழி
5. தமிழ் மொழி
6. சீன மொழி
இவற்றில், தற்போது தமிழ் மொழி மற்றும் சீன மொழி மட்டுமே பேச்சு வழக்கில் உள்ளது. இவற்றில் இருந்து தோன்றியவை தான் பிற மொழிகள்.
With regards,
Sandhiya Saravanan
Comments
Post a Comment